ராஜிவ் காந்தி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்தநாளை இன்று (ஆக. 20) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். தொடர்ந்து, ரத்த தான முகாமையும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், கோவை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.