‘பள்ளியில் மிகவும் பின்தங்கிய மாணவனாக இருந்தேன்’ - சூர்யா
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அரக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா, அகரம் சார்பில் நடைபெறும் கல்வி பட்டறை மூலம் பயன் பெற்ற மாணவர்கள் குறித்தும் தான் கல்வி பயின்ற நாள்கள் குறித்தும் கலந்துரையாடினார்.