‘முன்னாள் மாணவியின் பேச்சைக் கேட்டு மேடையிலேயே அழுத சூர்யா’ - வைரல் காணொலி!
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி பயின்ற மாணவி ஒருவர், தான் கல்வி பயின்ற காலத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், அவலங்கள் உள்ளிட்டவை குறித்து மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடையிலிருந்த சூர்யா, கண்கலங்கி அம்மாணவிக்கு ஆறுதல் கூறிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Last Updated : Jan 7, 2020, 8:36 AM IST