Two-wheeler theft; காட்பாடி ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடும் மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் வைரல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 1:43 PM IST

thumbnail

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் பொன்னை அடுத்த தெங்கால் அவரக்கரை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் கிரேன் என்பவர், ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (அக்.21) அதிகாலை சுமார் 12.30 மணி அளவில், தனது நண்பரை வழி அனுப்புவதற்காக காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து உள்ளார்.

அப்போது காட்பாடி ரயில் நிலையம் எதிரில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பரை வழி அனுப்பச் சென்று உள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும், ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை தேடியும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, தனது இருசக்கர வாகனம் திருடு போயிருந்ததை அறிந்த பிரசாந்த், அருகில் உள்ள காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.