தேனியில் பாம்புகளுடன் நடனமாடிய இளைஞர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 7:46 AM IST

thumbnail

தேனி: கோயில் திருவிழாவில் பாம்புடன் நடனமாடிய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிய நிலையில், பாம்புடன் நடனம் ஆடிய இளைஞரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடந்த​து. 

அ​தில், இளைஞர் ஒருவர் பாம்புகளுடன் ​நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.​ இதையறிந்த தேனி வனச்சரகர் செந்தில்குமா​ர் விசாரித்ததில், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் வீரபாண்டியை​ச் சேர்ந்த முகில்வண்ணன் (23) என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் ​அவரை கைது செய்தனர். 

மேலும், ​அவரிடமிருந்து 3 நல்ல பாம்புகள், 2 சாரைப் பாம்புகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பாம்புகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. கைதான முகில்வண்ண​ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கோயில் திருவிழா நிகழ்ச்சியில் பாம்புகளுடன் நடனம் ஆடிய வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை தேனி வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.