ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

By

Published : Jul 21, 2023, 10:25 PM IST

thumbnail

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவானது ஜீலை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே ஊரணி பொங்கல் விழாவானது ஜூலை 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி திருவிழாவிற்கான காப்பு கட்டப்பட்டது. 

இதனையடுத்து திரெளபதி அம்மன் மகாபாரதம் வரலாற்று நிகழ்வு "பாரதம் பாடுதல்" ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. இன்று விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீ திரெளபதி அம்மன், ஸ்ரீ தர்மராஜா சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேளதாளம் முழங்க திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து மஹா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் ஜீலை 23 ஆம் தேதி காலை வருடாபிஷேகமும், மாலை தீ மிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. திருக்கல்யாண திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.