சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் உலா வரும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்!

By

Published : Aug 13, 2023, 12:12 PM IST

thumbnail

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வனச்சாலை இரைச்சல் இன்றி இயல்பாக இருப்பதால், வனவிலங்குகள் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு (ஆகஸ்ட் 12) சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் திம்பம் 6வது வளைவில் சிறுத்தை நடந்து செல்வதைப் பார்த்து செல்போனில் படம் பிடித்தனர்.

மேலும், வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் சிறுத்தை சிறிது நேரம் நடந்து சென்று, பின்னர் சாலையோர தடுப்புச் சுவரில் பதுங்கிக் கொண்டது. இதனைப் பார்த்த காரில் சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 

மேலும், இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், இதனால் தாங்கள் அவதிக்குள்ளாவதாகவும் தெரிவித்தனர். மேலும், வனத்துறையினரால் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.