இந்திய விஞ்ஞானிகளை பாராட்டும் வகையில் ஓவியம்! தேசிய கொடியை "சூரியன் மீதே" வரைந்து அசத்திய ஓவியர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 2:23 PM IST

thumbnail

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் சு.செல்வம் ஆதித்யா எல் -1 விண்கலம் வெற்றிகரமாக சூரியனை நோக்கி சென்று ஆய்வு செய்ய வேண்டியும், இந்திய விஞ்ஞானிகளை பாராட்டும் வகையிலும் சூரியனை தெரியும்படி கண்ணாடி போன்ற தாளில் வைத்து அதில் தேசிய கொடியை "சூரியன் மீதே" வரைந்தது போன்று வரைந்தார்.

ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடையவேண்டியும், இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் வகையிலும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் சூரியனை கண்ணாடி பொன்ற தாளில் வைத்து பார்த்து இந்தக் கண்ணாடித் தாளில் தெரியும் சூரியன் மேல் ஆரஞ்சு வண்ணமும் கீழே பச்சை வண்ணமும் தீட்டி வட்டமான சூரியனில் அசோக சக்கரமும் வரைந்து சூரியனின் மீதே தேசியக்கொடி ஓவியமா, எப்படி வரைய முடியும் என்று ஆச்சரியப்படுவது போன்று பத்து நிமிடங்களில் சூரியன் மீது தேசியக்கொடி வரைவது போன்று ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்துள்ளார்.

ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம் பி.எஸ்.எல். சி சி -57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் செயற்கைகோளை நிலை நிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது ஆதித்யா எல்-1 திட்டத்தின் நோக்கம் ஆகும். 

சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை போன்றவைகளை ஆய்வு செய்யும். சூரியனை ஆராய்வதற்கு என இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நாடுகள் மட்டுமே பிரத்யேக செயற்கைக்கோளை செலுத்தியுள்ளன. அந்த வரிசையில் சூரியனை ஆராய்வதற்காக பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் நாடு, நம் நாடு எனும் பெருமையை ஆதித்யா எல்-1 மூலம் இந்தியா பெற்று உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.