ஈரோடு கொடிவேரி அணையில் குளிக்கத் தடை; பொதுப்பணித்துறை அறிவிப்பு

By

Published : May 3, 2023, 2:04 PM IST

thumbnail

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைகட்டு வழியாக 2400 கன அடி உபரிநீர் வெளியேறி வருவதால், பொதுப்பணித்துறை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அணையில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கொடிவேரி அணை வழியாக 2400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடிவேரி அணை வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால் சுற்றுலாப் பயணிகள் அணையில் குளிக்கவும், அணைக்கட்டுக்கு வரவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.