சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 20 யானைகள்.. கிருஷ்ணகிரி வனத்துறை எச்சரிக்கை

By

Published : Feb 3, 2023, 10:05 AM IST

Updated : Feb 3, 2023, 8:40 PM IST

thumbnail

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து இன்று காலை நாகமங்கலம் வழியாக, 20 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. சானமாவு வனப்பகுதியில் இருந்த 20 யானைகளில் 4 யானைகள், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, பேரண்டப்பள்ளி என்னும் இடத்திற்கு சென்று உள்ளது.

இதன் காரணமாக பேரண்டப்பள்ளி, கதிரேப்பள்ளி, ஆலூர், காமன்தொட்டி, காவேரி நகர் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Last Updated : Feb 3, 2023, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.