சிக்கன் ஃப்ரைட் ரைஸ் விலை அதிகம்.. போதையில் பேக்கரி மீது தாக்குதல் நடத்திய நபர்.. வைரல் வீடியோ!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 1:32 PM IST

thumbnail

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள ஆத்துமேட்டில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த யாசிர் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு மது போதையில் வந்த அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணைச் செயலாளர் அருண்பாண்டி என்பவர் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்து சாப்பிட்டு உள்ளார்.

இவர் மது போதையின் உச்சத்திற்கு சென்றதால் டேபிளிலேயே படுத்து உள்ளார். கடை ஊழியர் அருண் பாண்டியனை எழுப்ப முயன்றபோது ஊழியரைத் தாக்கியுள்ளார். அப்போது தட்டிக் கேட்க வந்த பஷீர் என்ற முதியவரை தாக்கி கீழே பிடித்து தள்ளியதில் அவரின் மண்டை உடைந்தது.

அதன்பிறகு ஆத்திரம் அடங்காத அருண்பாண்டி கடையில் இருந்த டேபிள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேக்கரியில் இருந்த தின்பண்டங்கள் சிதறின. மது போதையில் இருந்தவரை கட்டுப்படுத்த முடியாத ஊழியர்கள் உடனடியாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தலையில் காயமடைந்த பஷீரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் அருண்பாண்டியனிடம் விசாரணை நடத்திய போது, பேக்கரியில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அருண் பாண்டியன் அதிக மது போதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையம் வருமாறு கூறி போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.