டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மொத்தமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் ஆணுறை விழிப்புணர்வு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.