கோவிட் தடுப்பூசி மைல்கல்: நயாகராவில் வாண வேடிக்கை
நியூயார்க்கில் இதுவரை 70 விழுக்காட்டினர் முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளார். இதைக் கொண்டாடும் விதமாக நயாகாரா நீர்வீழ்ச்சி அருகே வாண வேடிக்கை நிகழ்ந்தது. மேலும் நீர்விழ்ச்சியானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.