PS2: 'மனசு நிறைஞ்சிருக்கு' - ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தபின் அருள்மொழிவர்மன் @ ரவி!

By

Published : Apr 28, 2023, 3:38 PM IST

thumbnail

சென்னை: உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 2 இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதற்காக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். 

திரையரங்கிற்கு வந்த ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் படைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயம் ரவி கட்வுட் மற்றும் பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து ஜெயம் ரவி படத்தைப் பார்த்தார்.

பின்னர் படம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி கூறுகையில், ''பொன்னியின் செல்வன் படக்குழு இந்தப் படத்திற்காக கடின உழைப்பை கொடுத்திருந்தோம். தற்போது படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைப் பார்க்கும்போது மன நிறைவைத் தந்துள்ளது.

தற்போது படம் பார்த்தவர்கள் படம் குறித்து அனைவருக்கும் தெரிவித்த பின்னர் மேலும் அதிக மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்ப்பார்கள். படம் பார்க்க வந்த அனைவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: பறை, செண்டை மேளம் முழங்க சோழர்களை வரவேற்ற ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.