நவராத்திரி விழா: தனலட்சுமியாய் ஜொலித்த கன்யக பரமேஸ்வரி அம்மன்
அமராவதி: இந்தியா முழுவதும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. குண்டூரில் உள்ள கன்யக பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரியின் ஐந்தாவது நாளை முன்னிட்டு அம்மன் சிலை தனலட்சுமியின் அவதாரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று கோடி நாணயங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்துச்சென்றனர்.