Video: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
வாணியம்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திர வனப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலாற்றினை ஒட்டி உள்ள நீர்நிலை மற்றும் கால்வாய்கள் தூர்வார வேண்டும் என்றும்; பாலாற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST