ETV Bharat / state

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்தில் மூவர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 21, 2021, 11:13 AM IST

Updated : Jun 21, 2021, 2:13 PM IST

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு தரைமட்டமாகி கிடக்கும் கட்டடங்கள்.
விருதுநகரில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு தரைமட்டமாகி கிடக்கும் கட்டடங்கள்.

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

விருதுநகர்: சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் 21) காலை பட்டாசு தயாரிப்பின்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் சூர்யா வீடு உள்பட, அருகருகே இருந்த ஐந்து வீடுகள் சேதமடைந்தன.

இதில் வெடி விபத்தில் சிக்கி செல்வமணி (35), கற்பகம் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போன ரஃபியா சல்மா எனும் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மேலும் வீட்டின் உரிமையாளர் சூர்யா, சோலையம்மாள் ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு தரைமட்டமாகி கிடக்கும் கட்டடங்கள்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த, மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

மேலும் வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா எனவும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது

Last Updated :Jun 21, 2021, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.