ETV Bharat / state

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாடு ஆசிரியர்கள்!

author img

By

Published : Dec 19, 2019, 4:44 PM IST

Updated : Dec 19, 2019, 5:30 PM IST

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாடு ஆசிரியர்கள்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாடு ஆசிரியர்கள்

விருதுநகர்: மூன்று அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸுக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கருணைதாஸ் தனது மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை விரைவாகவும் ஆர்வமாகவும் செய்ய டக்ஸ்மேத்ஸ் மூலமாகவும், மாணவர்களின் பேச்சுத்திறன், பாடும் திறன் வளர்க்க அடாசிட்டி மூலமாகவும் பாடங்களை வீடியோக்களாக உருவாக்கி மாணவர்களுக்கு கற்பித்துவருகிறார்.

தற்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்ப தேசிய விருதிற்குரிய ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மூன்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் செல்வக்குமார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாசர் ரமேஷ் ஆகிய மூன்று ஆசிரியர்களும் வரும் டிசம்பர் 23ஆம் தேதி டெல்லி ஜன்பத் சாலையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் சென்டரில் நடைபெறும் விழாவில் விருதுபெற உள்ளனர்.

இதையும் படிங்க: சீமானுக்கு டஃப் கொடுக்குறீங்க நித்தி - செந்தில் குமார் எம்.பி., கலாய்!

Intro:விருதுநகா்
19-12-19

விருதுநகர் அரசு பள்ளி ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Tn_vnr_03_Central_gv_best_teacher_award_photo_script_7204885Body:விருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸுக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கருணைதாஸ் தனது மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை விரைவாகவும் ஆர்வமாகவும் செய்ய டக்ஸ்மேத்ஸ் மூலமாகவும், மாணவர்களின் பேச்சுத்திறன், பாடும் திறன் வளர்க்க அடாசிட்டி மூலமாகவும் படங்களை வீடியோக்களாக உருவாக்க போட்டோஸ்டோரி மூலமாகவும் கற்பித்து வருகிறார். தற்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை தகவல் தொழில் நுட்ப தேசிய விருதிற்குரிய ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து 3 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் செல்வக்குமார், விழுப்புரம் மாவட்டம் லாசர் ரமேஷ் ஆகிய மூன்று ஆசிரியர்களும் வருகின்ற டிசம்பர் 23ம் தேதி புதுடில்லியில் ஜன்பத் சாலை டாக்டர் அம்பேத்கார் இண்டர்நேசனல் செண்டரில் நடைபெறும் விழாவில் விருதுபெற உள்ளனர்.Conclusion:
Last Updated :Dec 19, 2019, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.