ETV Bharat / state

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு ,மூவர் காயம்!

author img

By

Published : Jan 27, 2022, 4:25 PM IST

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

சாத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் : சாத்தூர் அருகே தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் (50) என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் புதுபிக்கும் பணிக்கான கட்டுமான வேலை நடைபெற்று வந்தது. இந்த பணியில் 5க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளிகள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டின் மாடி சுவற்றின் ஒரு பகுதியை இடித்து கொண்டியிருக்கும் போது திடீரென்று மற்றொரு சுவர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டட பணியில் ஈடுபட்டு கொண்டியிருந்த ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த முருகன் (50) மற்றும் முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதபாண்டியன்(46) கார்த்தி (22), மணிகண்டன் (26), ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.

பின்னர், காயம் அடைந்த நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

இதையடுத்து, தகவலறிந்து வந்த ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் முருகன் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கட்டட விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 4 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்றதாக இளம்பண் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.