ETV Bharat / state

சுற்றித் திரியும் இளைஞர்களை சுற்றும் ட்ரோன் கேமரா

author img

By

Published : May 4, 2020, 2:10 PM IST

ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி, சுற்றித் திரிபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, மற்ற நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி, சுற்றித் திரிபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், ஊரடங்கு உத்தரவை மீறி, பொதுமக்கள் வெளியில் சுற்றி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி முழுவதும் அப்படி சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணித்தனர். அப்போது வெளியில் சுற்றிய இளைஞர்கள் ட்ரோன் கேமராவைக் கண்டதும் ஓடி மறைந்தனர்.

இதையும் படிங்க:

சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் - ட்ரோன் கேமரா மூலம் தீவிரக் கண்காணிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.