ETV Bharat / state

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவன் வெறிச்செயல்!

author img

By

Published : Feb 3, 2020, 10:53 PM IST

wife murder husband arrestwife murder husband arrest
wife murder husband arrest

விருதுநகர்: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து, அவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்பிகே.புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காளிமுத்து, தனது மனைவி ராஜம்மாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றவே காளிமுத்து, தனது மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவன் வெறிச்செயல்

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மம்சாபுரம் காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் மனைவியைக் கொலை செய்த காளிமுத்துவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்னோவா காருக்குள் பிணமாகக் கிடந்த கேரள ரவுடி; நடந்தது என்ன?

Intro:விருதுநகர்
03-02-2020

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை.கணவனை கைது செய்து காவல்துறை விசாரணை

Tn_vnr_04_wife_murder_husband_arrest_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை.கணவனை கைது செய்து காவல்துறை விசாரணை...

சேலம் அருகே மேட்டூர் பகுதியை சேர்ந்த காளிமுத்து அவரது மனைவி ராஜம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்பிகே.புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தனது மனைவி ராஜம்மாள் மீது நடத்தையில் சந்தேகமடைந்து வீட்டில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மம்சாபுரம் காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பின்னர் மனைவியை கொலை செய்த காளிமுத்துவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.