ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி வெட்டி படுகொலை!

author img

By

Published : Nov 13, 2020, 5:43 PM IST

விவசாயி
விவசாயி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி வெட்டி படுகொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் ராஜேந்திரன் (70). இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். விவசாயியான ராஜேந்திரன் கிருஷ்ணன் கோவில் - குன்னூர் செல்லும் சாலையில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அங்கேயே ஒரு குடிசை அறையில் தங்கி இருந்துள்ளார். மேலும் இவர் 30 ஆடுகள் வரை சொந்தமாக வைத்துள்ளார்.

இதற்கிடையில் விவசாயி ராஜேந்திரன் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு அவரது நிலத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதிமக்கள் கிருஷ்ணன் கோவில் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உயிரிழந்த விவசாயி உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.