ETV Bharat / state

குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

author img

By

Published : Jun 21, 2021, 10:55 PM IST

aruppukottai-palayankottai-water-problem-porattam
குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் கடந்த ஆறுமாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்தும் உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு இன்று (ஜூன் 21) போராட்டம் நடத்தினார்கள்.

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பசும்பொன் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆறுமாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (ஜூன் 21) போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி, போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தினார்.

வட்டார வளர்ச்சி அலுவலரின் சமாதானத்தை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.