ETV Bharat / state

சமையல் பாத்திரங்கள் பறிமுதல் - பறக்கும் படையுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

author img

By

Published : Feb 11, 2022, 10:55 PM IST

வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை பறிமுதல்
வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை பறிமுதல்

அருப்புக்கோட்டை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்: அருப்புக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பூபால் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சமையல் பாத்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அலுவலகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற அலுவலர்கள் 14 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தீபாவளி சீட்டு போட்டவர்களுக்கு வழங்குவதகாக வைக்கப்பட்டிருந்த பொருள்களை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலுவலர்கள் பறிமுதல் செய்தாக விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை பறிமுதல்

அப்போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தேர்தல் அலுவலர் உறுதி அளித்ததைத்தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கையும் களவுமாகப் பிடிபட்ட தொடர் பைக் திருடர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.