ETV Bharat / state

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 22 ஆக உயர்வு!

author img

By

Published : Feb 24, 2021, 7:01 PM IST

cracker
விருதுநகர்

விருதுநகர்: சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த பிப்.12 ஆம் தேதி, ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (பிப்.24) , மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மனைவி ஜெயா (50) இறந்துள்ளார். மேலும், பலர் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து ஒன்றரை கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.