பள்ளிக்குச்சென்று திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை!

author img

By

Published : Jul 26, 2022, 10:51 PM IST

Updated : Jul 26, 2022, 10:57 PM IST

பள்ளிக்குச் சென்று திரும்பிய 11 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை!

சிவகாசி அருகே பள்ளிக்குச்சென்றுவிட்டு திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவி, வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்: சிவகாசி அருகே தம்பதியினர் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணம் முடிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் அதே மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு மாணவி வந்துள்ளார். பின்னர் மாணவியின் பாட்டி வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பாட்டி கூச்சலிட்டதில், உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தவரை கீழே இறக்கிப்பார்த்துள்ளனர்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

இதுகுறித்து மாறனேரி காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த எதிர்பாராத நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மாணாக்கர்கள் அடுத்தடுத்து இன்று ஒரே நாளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இதையும் படிங்க: திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை!

Last Updated :Jul 26, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.