ETV Bharat / state

தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள் - சிறுமியை விடுவித்த எஸ்.பி

author img

By

Published : Sep 25, 2021, 7:33 AM IST

Srinath
Srinath

செஞ்சி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் தந்தையை குத்தி கொலை செய்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை விடுவிக்க விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தை சார்ந்தவர் மாற்றுத்திறனாளியான வெங்கடேசன் (40). இவர் தன்னுடைய மனைவி இறந்த நிலையில், தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.

வெங்கேடசனின் மூத்த மகள் சென்னையில் உள்ள பிரபல துணி கடையில் வேலை செய்து வரும் நிலையில், இரண்டாவது மகள் அவலூர்பேட்டையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்காக வெங்கடேசன் மேல்மலையனூர் சென்று வீட்டிற்கு திரும்பினார். வீடு திரும்பிய இவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சடலமாக வீட்டிலிருந்த கட்டிலில் கிடந்தார்.

இதைப்பார்த்த வெங்கடேசனின் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அவலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் விசாரணை செய்தார்.

சிறுமியை விடுவித்த எஸ்.பி

பின்னர் வெங்கடேசனின் உடலை உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில், வெங்கடேசனின் இரண்டாவது மகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தனது தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்காப்புக்காக கொலை செய்ததாக அவர் கூறினார். இதன் பின் சிறுமியை கைது செய்த காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, தற்காப்புக்காக சிறுமி தந்தை கொன்றுள்ளதால் அவரை அந்த வழக்கிலிருந்து விடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.