ETV Bharat / state

கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம்

author img

By

Published : Jun 19, 2021, 9:22 AM IST

விசாரணை  விழுப்புரம் செய்திகள்  அடையாளம் தெரியாத ஆண் சடலம்  காவல் துறை  பிரேத பரிசோதனை  புதுச்சேரி  viluppuram news  viluppuram latest news  deadbody  unidentified deadbody  seashore  viluppuram unidentified deadbody stranded on seashore  நொச்சிகுப்பம் கடற்கரை  மரக்காணம்
கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் உடல்: தீவிர விசாரணையில் காவல் துறையினர்

நொச்சிக்குப்பம் கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

விழுப்புரம்: மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நொச்சிக்குப்பம் கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மரக்காணம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மரக்காணம் காவல் துறையினர், கரை ஒதுங்கிய உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அடையாளம் தெரியாத உடல் என்பதால், இது குறித்து மரக்காணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஏழை பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.