விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்கள் ஹேமாவதி (7) கலையரசி (10) ஆகிய இருவரும் சுபாஷினி (10) என்பவருடன் குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது குழந்தைகள் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.