குட்டையில் குளிக்க சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

author img

By

Published : Jan 10, 2022, 10:58 AM IST

குட்டையில் குளிக்க சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

செஞ்சி அருகே விவசாயி நிலத்தில் பெற்றோர் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த போது, அருகில் இருந்த குட்டையில் குளிக்க சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்கள் ஹேமாவதி (7) கலையரசி (10) ஆகிய இருவரும் சுபாஷினி (10) என்பவருடன் குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது குழந்தைகள் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

செஞ்சி காவல்துறையினர்

இச்சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வடசென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.