ETV Bharat / state

கல்லூரிக்கும் தன்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கும் திருஷ்டி கழித்த மாணவர்!

author img

By

Published : Jul 11, 2022, 5:48 PM IST

விழுப்புரம், அரசு கல்லூரியில் மாணவர் ஒருவர், தான் பயின்ற கல்லூரிக்கும், தன்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கும் திருஷ்டி கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்லூரிக்கும் தன்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கும் திருஷ்டி கழித்த மாணவர்
கல்லூரிக்கும் தன்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கும் திருஷ்டி கழித்த மாணவர்

விழுப்புரம் அரசு கல்லூரியில் நேற்று (ஜூலை.09) முன்தினம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றது.

இதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாறு படிப்பு பயின்ற பிரசாந்த் என்கிற மாணவர், தேர்வு எழுதி முடித்த சில நிமிடங்களில் வெளியே வந்து, தன்னுடைய சக நண்பர்கள் மற்றும் கல்லூரியின் முகப்பு வாயிலில் நின்று பூசணிக்காய் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தார்.

இந்த நிகழ்வை உடன் இருந்த சக மாணவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரிக்கும் தன்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கும் திருஷ்டி கழித்த மாணவர்

இணையத்தில் இந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் "கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமே" என கேஷ்டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

தான் பயின்ற கல்லூரி மற்றும் தன்னுடன் பயின்ற சக நண்பர்களுக்கும் பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்த மாணவனின் நிகழ்வு இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் படம் நடிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.