ETV Bharat / state

விழுப்புரம் அருகே தனியார் பேருந்து விபத்து: 30 பேர் படுகாயம்!

author img

By

Published : May 29, 2023, 11:36 AM IST

Updated : May 29, 2023, 3:57 PM IST

Breaking Bews
விழுப்புரம் அருகே தனியார் பேருந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம், பஞ்சமாதேவியில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 30 பயணிகள் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது பஞ்சமாதேவி கிராமம். இந்த கிராமத்தில் இன்று காலை திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழியாக நெய்வேலி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டிவனத்தில் இருந்து பண்ருட்டி, கடலூர் வழியாக நெய்வேலி செல்லக்கூடிய தனியார் பேருந்தை திண்டிவனம் சித்தனி பகுதியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் இன்று காலை ஓட்டிச் சென்று உள்ளார், விழுப்புரம் -கும்பகோணம் சாலை பஞ்சமாதேவி என்ற பகுதியின் அருகே உள்ள வளைவில் இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற போது, தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து உள்ளது.

பேருந்து ஓட்டுனர் சபரிநாதன் பிரேக் அடிக்க முற்பட்டபோது பிரேக் பிடிக்க முடியாமல் சாலையோரம் இருந்த வளைவில் நிலை தடுமாறி கவிழ்ந்தது, இதில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று விட்டு, சிறிது தூரத்தில் குறைந்த வேகத்தில் சென்ற நிலையில் பேருந்து கவிழ்ந்ததால் பெரும் அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் வளவனூர் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். பின்பு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து உள்ளனர், இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்திற்கான காரணம்: இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காகத் தான், தனியார் பேருந்து ஓட்டுனர், வாகனத்தை வேறொரு திசைக்கு இயக்கும்போது வாகனத்தின் பிரேக் பழுதாகி, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: சிவகங்கை பாண்டியன் கோட்டையில் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு: தொல்லியல் துறை

Last Updated :May 29, 2023, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.