ETV Bharat / state

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் பட்டா இல்லாமல் நுழைந்த இயற்கை நண்பர்கள்

author img

By

Published : Oct 20, 2019, 7:30 AM IST

இயற்கை நண்பர்கள்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மின்கம்பிகளில், கீச் கீச் என்ற சத்ததுடன் எழில் மிகு நகரம் உருவாகியுள்ளது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எண்பது, தொன்னூறு காலக்கட்டத்தில் அதிகாலை, மாலை நேரங்களில் வீதியில் நடந்து சென்றால் கீச், கீச் என்ற சத்தம் கிராமங்கள் முழுவதும் ஆக்கிரமிக்கும். வளர்ந்து வந்த நாகரீகம், தொழில்நுட்பம் காரணமாக காலப்போக்கில் அந்த சத்தங்கள் குறைந்து, ஆங்காங்கே பாடல் ஒலிகளும், மனித சத்தமும் அதிகரிக்க தொடங்கின. அந்த கீச், கீச் சத்தம் முற்றிலும் காணாமல் போனது. இதற்கு காரணம் கதிர்வீச்சுகளின் தாக்கம் என்றாலும், அழகிய சத்ததை கொடுத்த தூக்கனாங்குருவி, சிட்டுக்குருவிகளை பாதுகாக்காமல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலியே ஆர்வமாய் இருந்தோம்.

இதனால் இன்று கிராமம் மற்றும் நகரங்களில் ஒரு குருவியின் சத்ததையாவது கேட்டுவிட மாட்டோமா என செல்போனில் டெக்டர் செயலியை ஆன் செய்து வைத்துக் கொண்டு காடு, மலை, முகடு, தரிசு நிலம் என அனைத்துப் பகுதியிலும் அலைந்து வருகிறோம். ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை. தற்போது தான் அறிவு வந்தது போலும், இருபது வருடம் கோமாவில் இருந்து தெளிந்தது போல,குருவிகளை காக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுகின்றன.

தூக்குனாங்குருவி கூடு
தூக்குனாங்குருவி கூடு

அவை எங்களை காப்பாற்றுங்கள் என தங்களது இனிமையான சத்ததின் மூலம் பத்தாண்டுகளாக கத்தி வந்தன. ஆனால் அதையெல்லாம் நாம் காதில் வாங்கவில்லை. ஆனால் தற்போது அவை பாவம் செய்யாமல், புண்ணியம் மட்டுமே செய்ததால் சொர்க்கத்திற்கு சென்று விட்டன. இப்போது அவற்றை தேடினால் எப்படிக் கிடக்கும். இதற்கு மாற்றாக சில கிராம மக்கள் புண்ணியம் செய்ததற்கு பலனாக அந்த பகுதியில் மட்டும் சில குருவி வகைகளை காண முடிகிறது. அதில் சிலப்பகுதிகள் தான் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அங்கு உள்ள சில கிராமங்களில் 90களில் கேட்ட அந்த அழகிய ஒசை மீண்டும் கேட்க தொடங்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் வரிசையாக கூடு கட்டி சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வருகிறது. பார்ப்பதற்கு அழகிய இயற்கை நிறைந்த எழில்மிகு நகரமாக அந்த பகுதி காணப்படுகிறது.

கீச் கீச் சத்தமிடும் இயற்கை நண்பர்கள்

இது அப்பகுதி பொதுமக்களிடையே ஆச்சர்யத்தையும், பார்ப்பவரை மதி மயங்கவும் வைக்கிறது. பருவ மழை தொடங்கும் முன்னரே சிட்டுக்குருவிகள் தன் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் தானே இயற்கைச் சூழலில் கட்டமைக்கும் என்பதை நாம் இப்போது இதன்மூலம் பார்க்க முடிகிறது. சிட்டுக்குருவிகள் தான் வாழும் வீட்டை பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத இடத்தில் அமைத்து கொள்ளதான் விரும்பும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். மேலும் தங்கள் இணை மற்றும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு இரண்டிற்கும் ஆறு அறைகள் வைத்தே சுறுசுறுப்பாக தன் கூட்டைக் கட்டி திறமையாகவும் அறிவாளியாகவும் செயல்படுகிறது. கொஞ்சம் என்றாலும் மன நிறைவோடு வாழ வேண்டும் என்பதே சிட்டுக்குருவியின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடமாகும்.

விவசாயி சோமத்துறை பேட்டி

இதையும் படிங்க:"இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வருகிறோம்"

Intro:tn_vpm_02_bird_pagage_gs_vis_tn10026.mp4Body:tn_vpm_02_bird_pagage_gs_vis_tn10026.mp4Conclusion:மின்கம்பியில் இயற்கையின் எழில் மிகு நகரம் ,அழகிய வீடு அற்புத படைப்பு !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்கம்பிகளில் மற்றும் இயற்கை பூஞ்சோலையில் அழகிய நகரம் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடுமையான வெப்பமும் வறட்சியான நிலப்பகுதிகளும் பெரும்பாலும் காணப்படுகின்றன, ஏன் மிகவும் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் கூட தலை விரித்து ஆட கூடிய தருணம் நாம் கூட பார்த்தோம்,அதெல்லாம் கடந்து போய் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியது. பெருமளவு மழை இல்லை என்றாலும் தற்போது வரையிலும் பெய்திருக்கக் கூடிய மழை குளம் குட்டை ஏரி ஓடை அணை போன்ற இடங்களில் ஓரளவிற்கு நிரம்பும் அளவிற்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது,இதனைஅடுத்து சிட்டுக்குருவிகள் தங்களுக்கான கூடுகள் கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.இது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தையும் பார்ப்பவரை மதி மயங்க வைக்கிறது, பொதுவாக காற்று மாசுபாடு,அலைகற்று மற்றும் ஒலிபெருக்கிகள், பட்டாசு சத்தங்கள் போன்ற இயற்கைக்கு எதிராக தோன்றும் வன்மையாக வெகுவாக குறைந்து வரும் உயிரினம் தான் இந்தப் பறவைகள் இனம் அந்த வகையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வெள்ளித்திரையிலும் பாதுகாக்க சொல்லி வந்தார்கள். பொருட்படுத்தாமல் தன் வேலைகளை பார்த்துதான் வருகின்றனர்,மேலும் பருவ மழை துவங்கும் முன்னரே சிட்டுக்குருவிகள் தன் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தானே இயற்கைச் சூழலில் கட்டும் இடத்தை நாம் இப்போது பார்க்கிறோம்.மேலும் சிட்டுக் குருவிகள் தன் வாழ்வில் தேர்ந்தெடுக்கும் முழுக் கவனமும் செலுத்துவது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஆம் அது உண்மையே வாருங்கள் பார்க்கலாம். சிட்டுக்குருவிகள் தன் வாழும் வீட்டை பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்த இடத்தில் மட்டும் தேர்ந்தெடுக்கும் முக்கியமாக கரும்புத் தோட்டங்களுக்கு மேலே செல்லும் மின் கம்பிகளுக்கு மேலே மட்டும் தன் வாழ்வில் கூட கட்டப்படுவது முக்கிய காரணம் என்பதே இங்கு அதற்கு நிதர்சனமான உண்மையாகும்,தங்கள் இணையான மற்றும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு முன்னேற்பாடுகளுடன் இரண்டிற்கும் ஆறு அறைகள் வைத்தே சுறுசுறுப்பாக பின்னே தன் கூட்டைக் கட்டி திறமையாகவும் அறிவாளியாகவும் செயல்படும் என்பதே சிட்டுக்குருவியின் மகத்தான சிறப்பாகும் சொற்பம் தான் என நினைக்காமல் கொஞ்சம் என்றாலும் மன நிறைவோடு வாழ வேண்டும் என்பதே சிட்டுக்குருவியின் மூலம் நாம் பாடம் கற்பது வாழ்க்கையின் மிகப்பெரிய அரிதான ஒன்றாகும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.