காதல் மனைவியை கடத்தியதாக கணவன் புகார் - 4 பேர் கைது

author img

By

Published : Dec 13, 2021, 9:25 AM IST

செஞ்சி காவல்துறை விசாரணை

செஞ்சி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை கடத்தி சென்றதாக மணமகன் அளித்த புகார் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த சிங்கவரத்திலுள்ள அரங்கநாதர் திருக்கோயிலில் டிச. 9 ஆம் தேதி, வெண்மணியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் 29 என்பவரும் அய்யன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பானுபிரியா 24 இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே அங்கு சென்ற பெண் வீட்டார் காதல் ஜோடியை பிரித்து மணமகளை அழைத்து சென்றனர். பின்னர் குலதெய்வக் கோயிலில் அப்பெண்ணுக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஒரே சமூகத்தை காதலர்கள்

இதனிடையே தனது மனைவியைக் கடத்திச் சென்று மொட்டை அடித்துவிட்டதாகப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது, காதல் கணவன் யுவராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை விசாரணை

இது தொடர்பாக யுவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பெண் பவானி அவருடைய தந்தை மற்றும் மாமா அண்ணாமலை உள்ளிட்டோரை கைது செய்து செஞ்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஒரு ரவுடி - தேசிய முன்னேற்றக் கழகம் புகார் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.