ETV Bharat / state

'சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவைச் சந்திப்பேன்' கருணாஸ்!

author img

By

Published : Jan 25, 2021, 7:30 AM IST

கருணாஸ் யாத்திரை பயணம்
கருணாஸ் யாத்திரை பயணம்

விழுப்புரம்: சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் சந்திப்பேன் என, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தேசியமும் தெய்வீகமும் எனும் ஆறு நாள் ரத யாத்திரையை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சென்னையில் தொடங்கினார். பின்னர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வழியாக வந்த அவரை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் கருணாஸ் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து ரத யாத்திரைக்குக் காவல் துறையினர் அனுமதி வழங்கினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்ற கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மதுரை விமான நிலையத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, யாத்திரைப் பயணம் மேற்கொள்கிறோம்.

சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் சந்திப்பேன்

காவல் துறையினர் யாத்திரைக்கு அனுமதி மறுக்கின்றனர். இது எங்கள் சமுதாயத்தை அசிங்கப்படுத்தும் செயலாகும். சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் நேரில் சென்று பார்ப்பீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்குப் பதிலளித்த அவர், "நான் பல ஆண்டுகளாக சசிகலாவுக்கு ஆதரவாகதான் பேசி வருகிறேன். சசிகலா குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அவர் சிறையிலிருந்து வந்தவுடன் சந்திப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன்': கருணாஸ் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.