ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும்...!'

author img

By

Published : Oct 24, 2019, 3:51 PM IST

kallakurichi admk mla prabhu

விழுப்புரம்: இனி வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என்று கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் என மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றுமுடிந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றிபெற்றார்.

மற்ற இரண்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அதிமுகவின் கை ஓங்கியிருந்தது.

உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் - கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்

தற்போது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளார் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றியை அதிமுக தொண்டர்கள் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். இதன் ஓர் அங்கமாக கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு தலைமையில் அதிமுக தொண்டர்கள், தியாகதுருக்கத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியால் நாங்கள் இன்று இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இனி வருப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

மேலும், வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர், மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளிலும் அதிமுக அங்கம் வகித்து கட்சியைப் பலப்படுத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை.. விபத்து ஏற்படும் அபாயம்!

Intro:tn_vpm_02_by_elecation_win_celebration_gs_vis_tn10026.mp4Body:tn_vpm_02_by_elecation_win_celebration_gs_vis_tn10026.mp4Conclusion:உள்ளாட்சித் தேர்தலிலும் வார்டு உறுப்பினர் மற்றும் கவுன்சிலர் மாநகராட்சியில் மேயர் போன்ற அனைத்திலும் அதிமுக வெல்லும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு பேட்டி !!

தமிழகத்தில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக மற்றும் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்,அதனுடைய விக்ரவாண்டி நாங்குநேரி புதுச்சேரி காமராஜ் நகர் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டி வந்த நிலையில் தற்போது இடைத்தேர்தலுக்கான வெற்றிமுகம் யாருக்கு என்று தெரிய வந்துள்ளது.அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனும் திமுக வேட்பாளர் புகழேந்தியும் போட்டியிட்டனர்.இந்த நிலையில் அக்டோபர் 21 வாக்குப்பதிவு நடைபெற்றது மேலும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை என்று விக்கிரவாண்டி நாங்குநேரி புதுச்சேரி காமராஜ் நகர் போன்ற பகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது,இந்த நிலையில் விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, வேட்பாளர் திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்றது முதலிலிருந்து அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்து வந்தார். இந்தநிலையில் பின்னடைவு வந்த புகழேந்தி மேலும் பின்னுக்குத்தள்ளி அமோக வெற்றி பெற்றார்.இதன் அடிப்படையில் அதிமுக கட்சி சார்பில் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் பிரபு அவர்கள் தியாகதுருகத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி அதிமுக நிர்வாகிகலோடு வெளிப்படுத்தினர் மேலும் செய்தியாளர்களை சந்தித்த பிறகு அம்மா அம்மாவின் ஆசியால் நாங்கள் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். மேலும் உள்ளாட்சித் தேர்தலிலும் வார்டு உறுப்பினர்,கவுன்சிலர், மாநகராட்சி தேர்தலில் மேயர் போன்ற பதவிகளும் அதிமுகவை வகித்து இந்த கட்சியை பலப்படுத்தவும்,என்று பேட்டியளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.