தமிழ்நாட்டில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை உடல் பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டு, கொசுவலையுடன் கூடிய தனியறையில் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், அதிலிருந்து பாதுகாக்க நிலவேம்பு கசாயம், விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் அவர்களது அறையில் தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் பலரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: