முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

author img

By

Published : Sep 17, 2022, 12:09 PM IST

முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீபத்து

பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வண்டிமேட்டை சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீபத்து
முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீபத்து

மேலும் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால், 1500 மூட்டை முந்திரி கொட்டை தோல் மற்றும் 500 லிட்டருக்கும் மேற்பட்ட முந்திரி எண்ணெய் தீயில் எரிந்து நாசமானது.

இதையும் படிங்க: மதுவுக்கு அடிமையான தம்பி; அவரது உடன்சுற்றிய நண்பரின் பைக்கை எரித்த அண்ணன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.