ETV Bharat / state

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 1, 2020, 2:30 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடிக் கடையில் கட்டட தலைமை தொழிலாளர் (மேஸ்திரி) மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருக்கோவிலூரில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கடையில் மேஸ்திரி எழுமலை என்பவர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருக்கோவிலூரில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கடையில் மேஸ்திரி எழுமலை என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மார்கெட் வீதியில் உள்ள ராகேஷ் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டடத்தில் கட்டட வேலை நடந்து வருகிறது. இங்கு திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஏழுமலை(35) என்பவர் மேஸ்திரியாக பணி செய்து வந்தார். எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் அருகிலேயே பாதுகாப்பு வசதி இல்லாமல் சென்று கொண்டிருந்த உயர் மின் கம்பியை, தாக்கியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அடுக்குமாடி கட்டட வேலை செய்ததே உயிரிழப்பு க்கு காரணம் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து அங்கு வந்த திருக்கோவிலூர் போலிசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:வனப்பகுதியில் மலையேற்றம்: யானை தாக்கி பெண் உயிரிழப்பு...!

Intro:tn_vpm_01_electrical_death_vis_tn10026Body:tn_vpm_01_electrical_death_vis_tn10026Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கடையில் மேஸ்திரி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மார்கெட் வீதியில் உள்ள ராகேஷ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில், திருக்கோவிலூர் அருகே உள்ள செவலை ரோடு பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரது மகன் எழுமலை(35) என்பவர் மேஸ்திரி வேலை செய்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் அருகிலேயே பாதுகாப்பு வசதி இல்லாமல் சென்று கொண்டிருந்த உயர் மின்சார கம்பியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியின் மட்டக்கோல் பட்டுள்ளது.

அதில் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மேஸ்திரி அழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே எழுமலை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அடுக்குமாடி  கட்டிடத்தில் வேலை செய்தது தான் இந்த உயிரிழப்பு காரணம் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோவிலூர் போலிசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.