விழுப்புரம் மாவட்டம் எம்.ஜி.ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்வர் மாவட்ட இறைச்சி சந்தையில் மீன் கடை நடத்தி வந்தார். அதையடுத்து அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று(ஏப்ரல் 17) சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, விழுப்புர நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி, மீன் விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டார். மேலும் அவர் மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்கக்கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: இறைச்சிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் - வேலூர் ஆட்சியர்