காணாமல் போன முதியவர் ஒரு மாதத்திற்குப் பின் எலும்புக்கூடாக மீட்பு

author img

By

Published : Jan 4, 2022, 11:35 AM IST

விக்கிரவாண்டி செய்யாத்துவிண்ணான் ஏரியில் காணாமல் போன முதியவர் அழுகிய நிலையில்  எலும்புக்கூடாக மீட்பு

விக்கிரவாண்டியில் காணாமல்போன முதியவர் ஒரு மாதத்திற்குப் பின் அழுகிய நிலையில் எலும்புக்கூடாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த செய்யாத்துவிண்ணான் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் எலும்புக்கூடாகக் கிடப்பதை அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர்.

இதனிடையே, அப்பகுதியில் யாராவது காணாமல் போனார்களா என்பது பற்றி விசாரித்தனர். இதில், அதே ஊரைச் சேர்ந்த ராமானுஜம் வயது 65 என்கிற கூலித்தொழிலாளி கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி முதல் காணாமல் போன விவரம் விசாரணையில் தெரியவந்தது.

காணாமல் போன முதியவர் ஒரு மாதத்திற்குப் பின் எலும்புக்கூடாக மீட்பு
காணாமல் போன முதியவர் ஒரு மாதத்திற்குப் பின் எலும்புக்கூடாக மீட்பு

இதனையடுத்து, இறந்தவரின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டினார். தொடர்ந்து, விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தரங்கம்பாடி; கனமழை காரணமாக உளுந்து, நிலக்கடலை சாகுபடி பாதிப்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.