ETV Bharat / state

வீடியோ கால் பேசியதாக வழக்கு - முருகன் விடுதலை

author img

By

Published : May 25, 2022, 8:03 AM IST

வீடியோகால் பேசிய வழக்கில் முருகனுக்கு விடுதலை
வீடியோகால் பேசிய வழக்கில் முருகனுக்கு விடுதலை

சிறையில் இருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முருகன், விடுதலை செய்யப்பட்டார்.

வேலூர், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக சிறை துறை முருகன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1இல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு மீதான சாட்சியங்கள் மற்றும் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் (மே24) நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முருகனை விடுதலை செய்து வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு தீர்ப்புக்கு பின்னர் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முருகன் தனக்கு 6 நாள் அவசர கால பரோல் விடுப்பு கேட்டு சிறை துறைக்கு மனு அளித்த போது, இந்த வழக்கையும், சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கையும் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பரோல் விடுப்பு சிறை துறை மூலம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பரோல் கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.