ETV Bharat / state

வாணியம்பாடி அருகே பொதுமக்கள் சாலை மறியல்; போலீசார் குவிப்பு!

author img

By

Published : Apr 21, 2019, 11:03 PM IST

பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர்: வாணியம்பாடி அருகே குப்பைத் தொட்டி வைக்கும் விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சம்மந்தி பகுதியில் ஒரே மதத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் அந்த கிராமத்திற்கு மாற்றொரு மதத்தைச் சேர்ந்த நபர், அப்பகுதியில் இடத்தை வாங்கி குடிசை அமைத்து வெளியூர் நபர்களை அழைத்து வந்து, அவர் சார்ந்த மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் கூடம் நடத்துவதாகவும், இதனால் அவ்வப்போது சலசலப்பு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்தக் கூடத்திற்கு எதிரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இக்குப்பை தொட்டியை அகற்றுமாறு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் பல மாதங்களாக இந்த இடத்தில்தான் குப்பைத் தொட்டி இருந்துள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து அந்தக் கூடத்தின் நிர்வாகி ஆமோஸ் என்பவர் வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதி மக்கள் ஐந்து பேரை விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தனிநபர் செயலை கண்டித்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, தனிநபர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை விடுதலை செய்யும் வரை மறியலை கைவிடமாட்டோம் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிகளவு காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Intro: வாணியம்பாடி அருகே குப்பை தொட்டி வைப்பதில் பிரச்சனை போலீஸ் குவிப்பு.


Body: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திபகுதியில் ஓரே மதத்தை சேர்ந்த மக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கிராமத்திற்கு புதிய ஒரு (வேற்று) கிருத்துவ மதத்தை சேர்ந்த நபர் திடீரென அந்த பகுதியில் இடம் ஒன்றை வாங்கி குடிசை அமைத்து வெளியூர் நபர்களை அழைத்து வந்து வேற்று மத கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் ஜெபக்கூட்டம் நடத்துவதாகவும், இதனால் அவ்வப்போது இப்பகுதியில் சலசலப்பு ஏற்படுகின்ற என மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த ஜெபக்கூடம் எதிரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது.

இக்குப்பை தொட்டியை அகற்றும்மாறு ஜெபகூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கு பொதுமக்கள் காலம்காலமாக இந்த இடத்தில் தான் குப்பை தொட்டி இருந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இது குறித்து ஜெபகூட நிர்வாகி ஆமோஸ் என்பவர் வாணியம்பாடி காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதி மக்கள் 5 பேரை விசாரணைக்காக அழைத்துவந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தனிநபர் செயலை கண்டித்து சாலை மறியிலில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அப்பகுதி மக்கள் தனிநபர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட 5 நபர்களை விடுதலை செய்யும் வரை மறியலை கைவிடமாட்டோம் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.


Conclusion: இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிக அளவு போலீஸ் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.