ETV Bharat / state

ராணுவத்தில் வேலை எனக்கூறி 57 பேரிடம் பண மோசடி: எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Dec 23, 2022, 6:46 PM IST

ராணுவத்தில் வேலை என கூறி பண மோசடி
ராணுவத்தில் வேலை என கூறி பண மோசடி

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 57 பேரிடம் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்: அரியூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், மூர்த்தி (51) மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சம்பத்குமார் (60), ஆகிய இருவரும் பல்வேறு ஊரில் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள 57 பேரிடம் சுமார் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் பெற்று போலி பணி ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக வேலூர் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இக்குற்ற சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் ராணுவ முகாமிலிருந்து பணி ஆணை வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: நூதன திருட்டில் ஈடுபட்ட வங்கி ஊழியர் - சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.