ETV Bharat / state

சிசிடிவி: நள்ளிரவில் டோல்கேட் ஊழியர் மீது கும்பல் கொலைவெறி தாக்குதல்

author img

By

Published : Dec 16, 2022, 1:49 PM IST

டோல்கேட் ஊழியர்கள் மீது கும்பல் கொலைவெறி தாக்குதல்
டோல்கேட் ஊழியர்கள் மீது கும்பல் கொலைவெறி தாக்குதல்

வேலூர், திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் இயங்கிவரும் சுங்கச்சாவடி ஊழியர் மீது கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டோல்கேட் ஊழியர்கள் மீது கும்பல் கொலைவெறி தாக்குதல்

வேலூர்: மேல்வல்லம் கிராமத்தில் வேலூர், திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு (12.12.22) நள்ளிரவில் இனோவா காரில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றனர்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர் காருக்கு சுங்கக்கட்டணம் கேட்டார். இதற்கு காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் திடீரென 'என்னிடமே நீ பணம் கேட்கிறாயா' என்று கூறி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் நிலைகுலைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கணியம்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுங்கச்சாவடி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பிரான்ஸ் 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி: மொராக்கோவின் முயற்சி கடைசியில் தோல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.