ETV Bharat / state

காய்கறிக்கடையில் சாராயப்பொட்டலங்கள் பறிமுதல்... 3 பேர் கைது

author img

By

Published : Aug 31, 2022, 10:16 PM IST

காய்கறி கடையில் சாராய பொட்டலங்கள் பறிமுதல்...3 பேர் கைது
காய்கறி கடையில் சாராய பொட்டலங்கள் பறிமுதல்...3 பேர் கைது

காய்கறிச்சந்தையில் திடீரென போலீசார் சாராய ரெய்டில் ஈடுபட்டு சாராய பொட்டலங்களைப் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனர்.

வேலூர் அருகே குடியாத்தம், தென்குளக்கரை பகுதியில் உள்ள காய்கறிச்சந்தையில் ஒரு காய்கறி கடையில் கள்ள சாராயம் விற்பதாக வந்த ரகசியத்தகவலின் அடிப்படையில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார், காய்கறி சந்தைப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டதில், காய்கறி கூடைகளுக்கு நடுவே ஏராளமான கள்ளச்சாராய பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காய்கறிக்கடையில் சாராயப்பொட்டலங்கள் பறிமுதல்... 3 பேர் கைது

மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட தமயந்தி ( 77), பாஸ்கர்( 35), துரை( 49) ஆகிய மூன்று பேரைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஏராளமான சாராய பொட்டலங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காய்கறிச்சந்தையில் திடீரென போலீசார் சாராய ரெய்டில் ஈடுபட்டு, கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த சம்பவம் சந்தைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.