வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சென்னை நோக்கி சென்ற போலேரோ சரக்கு வேனை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதில் மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 5 லட்சம் மதிப்பிலான ஒரு டன் எடை கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சக்திவேல், வேல்முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள் - ரவுண்டுகட்டி பிடித்த பொதுமக்கள்