ETV Bharat / state

காதலித்து ஏமாற்றியதாக வேலூர் இளைஞர் மீது கோவா இளம்பெண் புகார்

author img

By

Published : Feb 12, 2023, 1:40 PM IST

goa
goa

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி கர்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக கோவாவைச் சேர்ந்த இளம்பெண், வேலூரைச் சேர்ந்த இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். வேலூர் சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சுந்தர் (28) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து ரயிலில் வேலூருக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவருடன் அதே ரயில் பெட்டியில் பயணித்த கோவாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணையும் சுந்தர் வாங்கியுள்ளார். இதையடுத்து ரயில் பயணத்திற்குப் பிறகும் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் சுந்தர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது, சுந்தர் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் இளம்பெண் கோவாவில் உள்ள தனது வீட்டிற்கு சுந்தரை அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சுற்றிவிட்டு, இளம்பெண்ணிண் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இளம்பெண் கருவுற்றதாக தெரிகிறது. இது குறித்து சுந்தரிடம் தெரிவித்த இளம்பெண், உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சுந்தர், இளம்பெண்ணின் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கோவாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இளம்பெண்ணின் புகார் மனுவை வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை - கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.