வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப்பணியாற்றி வந்தவர், சாந்தி. இவர் தற்போது குடியாத்தம் கல்லூரி கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சாந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மாச்சனூர் கிராமத்தைச்சேர்ந்த சிவச்சந்திரன், அவரது சகோதரர் பிரபுதேவா மற்றும் ராகவேந்திரன் ஆகிய 3 பேரிடமும், கால்நடைத்துறையில் பணியிடம் காலியாக இருப்பதாகவும் ரூ.4 லட்சம் கொடுத்தால் டாக்டர் ரமேஷ் மூலம் வேலை வாங்கித்தருவதாகவும்கூறி 3 பேரிடமும் தலா 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால், இதுவரை வேலை வாங்கித் தரவில்லை என்றும், பணத்தையும் திரும்பத்தரவில்லை என்றும் கூறி, சிவச்சந்திரன் உட்பட 5 பேர் நேற்று வேலூரில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இப்புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குடியாத்தம் கோட்டாட்சியர் தனஞ்செயனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்