ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

author img

By

Published : Jun 9, 2022, 12:12 PM IST

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!
வேலூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!

வேலூர் மாவட்டத்தில் வருகிற 9மற்றும் 10ஆம் தேதிகளில் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற இருப்பதாக 1098 என்ற சைல்டு லைன் உதவி எண்ணுக்கு வரப்பெற்ற புகார்களை அடுத்து குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் குழந்தை திருமணங்கள் நடைபெற இருப்பதாக 1098 என்ற சைல்டு லைன் உதவி எண்ணுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சைல்டு லைன், சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர்.

ஆய்வில் பள்ளி சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கும், ஊசூர் அடுத்த அத்தியூரை சேர்ந்த 10- வது படிக்கும் 14 வயது சிறுமிக்கும், வேலூர் அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த 10 -வது படிக்கும் 16 வயது சிறுமி என மொத்தம் 3 சிறுமிகளுக்கு இன்று (ஜூன் 9) மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் சிறுமிகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கி சிறுமிகளின் படிப்பை தொடர அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - வேலூர் எஸ்பி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.