ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்… வேலூரில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:01 PM IST

நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி
நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி

Vellore Collector: வேலூர் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கார்களை சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்ய நோட்டீஸ் ஓட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி

வேலூர்: திருவலம் அருகே உள்ள இளையநல்லூர் பகுதியில் மத்திய மின் தொகுப்பு மையம் (பவர் கிரிட்) அமைக்க 2012 ஆம் ஆண்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியது. அப்போது அப்பகுதி விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் 2013ஆம் ஆண்டு 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய மின் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலத்திற்கு 1,750 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பணம் போதாது என வேலூர் நீதிமன்றத்தில் 19 விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அமைக்கப்பட்ட சத்துவாச்சாரி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு பாதிக்கப்பட்ட பணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் மேல்முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வட்டியுடன் 3 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லையென்றால் வேலூர் மாவட்ட ஆட்சியரின் இரண்டு கார்கள், வருவாய் கோட்டாட்சியர் இரண்டு கார்கள் ஜப்தி செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற ஊழியர் மற்றும் வழக்கறிஞருடன், கார்களை ஐப்தி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் என்கின்ற பெயர் மறைக்கப்பட்டவாறு இருந்த காரில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது

இதனால் மாவட்ட ஆட்சியர், அலுவலக மேலாளர், மற்றும் அரசு அதிகாரிகள் வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் 15 நாட்களுக்குள் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியவுடன் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸ் எடுக்கப்பட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: போலீஸ் வேடமணிந்து நூதன திருட்டு.. வேலூரில் பெண் உட்பட 8 பேர் கைது.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.